TNPSC Thervupettagam

தமிழகப் பத்திர வெளியீடுகளில் நிறுவையில் உள்ள தொகைகள்

December 21 , 2023 211 days 167 0
  • பத்திரங்கள் வெளியிடுவதன் மூலம் திரட்டப்பட்ட நிதியில், 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் தமிழ்நாடு மாநிலத்தில் சுமார் 5.38 லட்சம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
  • இதில் சுமார் 38.5%, அதாவது 2.07 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகைகள் 1 முதல் 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியவை ஆகும்.
  • நிலுவைத் தொகையில் 28.6% ஆனது 5 முதல் 10 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியவை ஆகும்.
  • 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதியில் பத்திரங்கள் வெளியிடப்பட்டதில் இருந்து உருவான நிலுவைக் கடனில், 16.4% ஆனது 20 ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவு காலத்தினை அடைகிற வேளையில் 9.7% ஆனது 10 முதல் 20 ஆண்டுகளுக்குள் மற்றும் 6.9% ஆனது ஓராண்டிற்குள் அதன் நிறைவுக் காலத்தினை அடைகிறது.
  • 2023 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில், மொத்த நிலுவைத் தொகை 7.41 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்