TNPSC Thervupettagam

தமிழ்நாடு சிறப்புப் புத்தொழில் நிதி

July 1 , 2024 17 days 150 0
  • மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநர் ஆகியோரால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்காக வேண்டி தமிழ்நாடு அரசு சிறப்புப் புத்தொழில் நிதியை அறிமுகப்படுத்த உள்ளது.
  • புதிய கால தொழில்முனைவோர் மேம்பாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய வகையிலான வளர்ச்சியை அடைய அவர்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வடிவிலான ஒரு சிறப்பு நிதி அறிமுகப்படுத்தப்படும், என்பதோடு இந்தத் திட்டத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட உள்ளது.
  • தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தாக்கத் திட்டம் (StartupTN) இதற்கான   பயனாளிகளை அடையாளம் காணும்.
  • கோயம்புத்தூர் மற்றும் திருச்சியில் 1.5 கோடி ரூபாய் செலவில் புதிய பிராந்தியப் புத்தொழில் நிறுவன மையங்கள் நிறுவப்படும்.
  • கடந்த இரண்டு ஆண்டுகளில் மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், ஓசூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் பிராந்திய புத்தொழில் நிறுவன மையங்கள் நிறுவப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்