TNPSC Thervupettagam

தமிழ்நாடு மாநில விருதுகள்

February 3 , 2021 1299 days 847 0
  • முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் 72வது குடியரசுத் தினத்தன்று மாநில விருதுகளை வழங்கினார்.
  • சுகாதார மற்றும் காவல் துறைகளின் ஊர்திகள் முதல் பரிசை வென்று உள்ளன.
  • ஊரக வளர்ச்சித் துறைக்கு இரண்டாம் பரிசு கிடைத்து உள்ளது.
  • சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியவை மூன்றாம் பரிசை வென்று உள்ளன.
  • சேலம் நகர காவல் நிலையம், திருவண்ணாமலை நகர காவல் நிலையம் மற்றும் கோட்டூபுரம் காவல் நிலையம் ஆகியவை மாநிலத்தின் சிறந்த முதல் மூன்று காவல் நிலையங்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
  • அதிக அரிசி உற்பத்தித் திறனுக்கான சி நாராயணசாமி நாயுடு விருதானது வடக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜி.செல்வ குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஏ.அப்துல் ஜபார் அவர்கள் 2021 ஆம் ஆண்டுக்கான கோட்டை அமீர் மத நல்லிணக்க விருதைப் பெற்றார்.
  • பின்வரும் நான்கு காவல் துறையினருக்கு காந்தியடிகள் காவல் பதக்கம் வழங்கப் பட்டுள்ளது.
    • டி.மகுடேஸ்வரி - புனித தோமையார் மலை
    • என்.செல்வராஜு - சேலம்
    • எஸ்.சண்முகநாதன் - ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும்
    • எஸ்.இராஜசேகரன் - திருவண்ணாமலை.
  • வீர தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கத்தைப் பெற்றவர்கள்
    • பி. முல்லை - LPG உருளை வெடித்த ஒரு விபத்தில் இருந்து 26 மாணவர்களைப் காப்பாற்றிய ஆசிரியை.
    • ஏ. பிரகாஷ் - 60 அடி ஆழமான கிணற்றில் விழுந்த யானையை மீட்பதில் ஈடுபட்ட வனக் கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர்.
    • லோகோ பைலட் ஜே.சுரேஷ் - இரயிலில் இருந்த 1,500க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றியவர்
    • ஆர். புகழேந்திரன் - மரம் விழுந்ததில் காயமடைந்த காவலரின் உயிரைக் காப்பாற்றியவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்