TNPSC Thervupettagam

தமிழ்நாடு யானைகள் வளங்காப்பு குறித்த மாநாடு 2023

August 16 , 2023 339 days 263 0
  • இரண்டு நாட்கள் அளவிலான தமிழ்நாடு யானைகள் வளங்காப்பு குறித்த மாநாடானது கோவையில் நிறைவு பெற்றது.
  • கைவிடப்பட்ட யானைகளைப் பராமரிப்பதற்காக என்று விலங்கு முகாம்களில் உள்ள யானைகள் பராமரிப்பு மற்றும் சீர்தரச் செயல்பாட்டு நடைமுறை (SOP) பற்றிய ஒரு கையேட்டினை வனத் துறையானது வெளியிட்டுள்ளது.
  • தமிழக வனத்துறையில், கால்நடை மருத்துவச் சேவைக்காக என்று பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப் பட்ட தனிப் பிரிவினை உருவாக்குவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
  • 42 யானைகள் வழித்தடங்கள் (பாலக்காட்டின் தெற்கே 24 தடங்கள் மற்றும் பாலக் காட்டின் வடக்கே 18 வழித்தடங்கள்) இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • இந்திய வனவிலங்கு அறக்கட்டளை (WTI) அமைப்பானது, தமிழ்நாட்டில் ‘யானைத் திருவிழாவினை’ தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்