TNPSC Thervupettagam

தமிழ்நாடு யானை இறப்புத் தணிக்கைக் கட்டமைப்பு

November 23 , 2022 607 days 927 0
  • நாட்டிலேயே இது முன்னெப்போதும் இல்லாத இதே வகையிலான முதல் முயற்சிகும்.
  • மாநிலத்தில் யானை இறப்புகளை பதிவு செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் மிகவும் விரிவான மற்றும் வெளிப்படையான செயல்முறையை அமைக்கிற வகையில் தமிழ்நாடு வனத்துறை யானை இறப்புத் தணிக்கைக் கட்டமைப்பை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • யானையின் இறப்புக்கான காரணங்களைத் தீர்மானிக்க, பிரேதப் பரிசோதனையை நடத்துவதற்கான ஒரு முறையான நிலையான நெறிமுறையை இது பரிந்துரைக்கிறது.
  • தடுக்கக் கூடிய மற்றும் இயற்கைக்கு மாறான மரணங்களின் சூழ்நிலைகளை ஆய்வு செய்யவும், அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உருவாக்கவும் இது உதவும்.
  • தமிழகம் முழுவதும் உள்ள காட்டு யானைகள் இறப்பிற்கு இது பொருந்தும்.
  • இது அனைத்து வனவிலங்குப் பகுதிகளிலும், பிராந்தியப் பிரிவுகளிலும் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்பட வேண்டும்.
  • உலகில் உள்ள ஆசிய யானைகளின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியாவைக் கொண்டுள்ளது.
  • நம்ப முடியாத அளவிற்கு, இவை இந்தியாவின் பெரும்பகுதி முழுவதும் மக்களுடன் வாழ்கின்ற நிலையில், அவற்றின் வாழிடப் பகுதி சுமார் 20 சதவிகிதம் மட்டுமே பாதுகாக்கப் பட்ட பகுதிகளுக்குள் உள்ளது.
  • ஆயினும் கூட, அவற்றின் எண்ணிக்கையானது நிலையாக அல்லது சில பிராந்தியங்களில் அதிகரித்து வருகிறது.
  • நீண்ட காலம் வாழும் பாலூட்டிகளில் ஒன்றாயானைகள், காடுகளில் ஆயுட்காலம் சுமார் 50 ஆண்டுகள் மற்றும் ஒரு தலைமுறையின் நீளம் 22 ஆண்டுகள் என்ற அளவில் வாழ்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்