TNPSC Thervupettagam

தமிழ்நாட்டின் பணப்புழக்க நிலை

July 11 , 2024 7 days 107 0
  • இந்திய ரிசர்வ் வங்கி ஆனது, சமீபத்தில் தமிழ்நாட்டிற்கான வழிவகைக்கான முன்பண (WMA) வரம்பினை சுமார் 3,601 கோடி ரூபாயிலிருந்து 4,582 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது.
  • சமீபத்திய ஆண்டுகளில், குறுகிய கால கடன் வாங்கும் வசதியை தமிழ்நாடு மிகவும் முழுமையாகப் பயன்படுத்தவில்லை.
  • இது மாநிலத்தில் போதுமான பணப்புழக்கம் உள்ளதற்கான அறிகுறியாகும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது WMA என்ற வடிவில் மாநிலங்களுக்கு குறுகிய கால நிதி உதவியை வழங்குகிறது.
  • இது மாநில அரசுகளுக்கு அவற்றின் வரவுகள் மற்றும் கொடுப்பணவுகளின் பணப் புழக்கத்தில் நிலவும் தற்காலிகச் சமமின்மைகளைச் சமாளிக்க உதவுகிறது.
  • 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதியின் முடிவில், தமிழக மாநில அரசின் கருவூல பத்திரங்களின் ஏலத்தில் 3,964 கோடி ரூபாய் முதலீடு இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்