TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் இருந்து இலங்கை கடவுச்சீட்டு

January 23 , 2024 178 days 231 0
  • தமிழ்நாட்டில் வசிக்கும் 200 இலங்கை புலம்பெயர் நபர்கள் கொண்ட குழு ஒன்று, சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தில் இலங்கை கடவுச்சீட்டுகளைப் பெற்றுள்ளது.
  • இந்தியாவில் புலம்பெயர் சமூகத்தினருக்கு இவ்வாறு அளிக்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.
  • முன்னதாக, தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை புலம்பெயர் மக்கள் வேறொரு மூன்றாவது நாட்டிற்குச் செல்ல விரும்பினால், அவர்கள் முதலில் புலம்பெயர் மக்கள் திருப்பி அனுப்பும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடவுச்சீட்டில் இலங்கைக்குச் சென்று, பின்னர் அங்கு இலங்கை கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  • இந்தப் புதிய முன்னெடுப்பின் கீழ், கடவுச் சீட்டை பெற அவர்கள் இலங்கைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை, அதற்கு மாறாக இந்தியாவில் உள்ள தூதரகத் திட்டங்கள் மூலம் கடவுச் சீட்டிற்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
  • பிறகு அவர்கள் இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்குச் செல்லலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்