TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் யானைகளுக்கான மீட்பு, சிகிச்சையளிப்பு மற்றும் மறுவாழ்வு மையம்

January 15 , 2024 186 days 198 0
  • கோவை மாவட்டத்தின் சிறுமுகை அருகே அமைந்த பெத்திகுட்டையில் வனவிலங்குகளுக்கான மீட்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தினை அமைப்பதற்காக 19.5 கோடி ரூபாய் நிதி அளிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • 53 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்த அதிநவீன மையம் அமைக்கப்பட உள்ளது.
  • இது பயிற்சி பெற்ற நிபுணர்களுடன், நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் நோய்க் கண்டறியும் கருவிகளைக் கொண்டிருக்கும்.
  • மறுவாழ்வு மண்டலம் என்பது நான்கு மண்டலங்களில் மிகப் பெரிய அளவில் ஆனதாகும் என்பதோடு அங்கு தற்காலிகமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட விலங்குகள் அனைத்தும் வைக்கப்பட்டு அதற்கான மறுவாழ்வு சிகிச்சைகளும் அளிக்கப்படும்.
  • இது சிகிச்சை அளிக்கப்பட உள்ள அனைத்து முக்கிய இனங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான ஐந்து பிரிவுகளைக் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்