இந்தியாவிற்கும் ஜப்பானிற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக 2வது கூட்டு இராணுவப் பயிற்சியான ‘தர்மா கார்டியன் 2019’ என்ற பயிற்சியானது மிசோரமில் நடத்தப்பட இருக்கின்றது.
இந்தக் கூட்டு இராணுவப் பயிற்சியானது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவை மேம்படுத்துவதோடு பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடவும் உதவும்.
தர்மா கார்டியன் பயிற்சியானது 2018 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் ஒரு வருடாந்திரப் பயிற்சியாகும்.