TNPSC Thervupettagam

தர்மா-தம்மா கருத்தரங்கு

January 12 , 2018 2381 days 746 0
  • பீகார் மாநிலத்தின் ராஜ்கிரில் ஏற்பாடு செய்யப்பட்ட 4-வது சர்வதேச தர்மா -தம்மா (Dharma-Dhamma) மீதான கருத்தரங்கை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.
  • மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், மதம் மற்றும் சமூகத்திற்கான ஆய்வு மையம் (Centre for Study of Religion and Society) ஆகியவற்றுடன் கூட்டிணைந்து நாளாந்தா பல்கலைக்கழகம் இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
  • சிறந்த நல்லிணக்கமுடைய உலகை உருவாக்குவதற்கு உலகளாவிய கூட்டிணைவை ஏற்படுத்துவதற்கும், அதற்கு வேண்டிய ஆலோசனைகளை பகிர்ந்து கொள்வதற்கும் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வியியல் நிறுவனங்களுக்கு வாய்ப்பை வழங்குவதற்கும் இக்கருத்தரங்கு நடத்தப்படுகின்றது.
  • இந்தியா மற்றும் ஆசியான் கூட்டுப் பேச்சுவார்த்தை உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இக்கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்