மூத்தப் பொதுக் கணக்குகள் பணி அதிகாரி S.S. துபே அவர்கள் 28வது தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் மத்திய அரசின் கணக்கு விவகாரங்களுக்கான ஒரு முதன்மை ஆலோசகராக விளங்குவார்.
இவர் மத்திய அரசாங்கத்திற்கான கணக்குச் சரிபார்ப்பு மற்றும் உள் தணிக்கைகளை மேற்கொள்வது போன்றப் பொறுப்புகளை வகிப்பார்.
தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டாளர், மத்திய அரசாங்கத்திற்கான செலவினங்கள், வருவாய்கள், கடன்கள் மற்றும் பல்வேறு நிதிக் குறிகாட்டிகளின் மாதாந்திர மற்றும் வருடாந்திரப் பகுப்பாய்வைத் தொகுக்கிறார்.
தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டாளர் நிதித் துறை அமைச்சகத்தின் செலவினத் துறையின் கீழ் பணி புரிகிறார்.
தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (CAG) கணக்கியல் செயல்பாடுகள் 1976 ஆம் ஆண்டில் அவரிடமிருந்து பறிக்கப் பட்டு தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டாளர் அலுவலரிடம் ஒப்படைக்கப் பட்டது.