ரவீந்திரநாத் தாகூர் இலக்கிய விருதிற்கான இரண்டாவது பதிப்பின் “இலக்கியப்” பிரிவில் 2010 ஆம் ஆண்டில் ”சோலோ” என்ற நாவலை இயற்றிய “ராணா தாஸ் குப்தாவிற்கு” தாகூர் இலக்கிய விருது வழங்கப்பட்டது.
இந்த நாவலானது தனிமையாக்கல் தொடர்பான ஒரு கதையாகும். மேலும் இது தற்போது கையிருப்பில் இருக்கும் அனைத்துப் பணத்தின் இழப்பு தொடர்பான ஒரு புதினமும் ஆகும்.
10,000 அமெரிக்க டாலர்கள், தாகூர் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு சிலை மற்றும் இலக்கியப் பங்களிப்பிற்கான ஒரு சான்று ஆகியவை தாஸ் குப்தாவிற்கு வழங்கப்பட்டன.
“சமூகத்தில் சாதனை புரிதல்” என்ற பிரிவில் இதே விருதுக்கு ஜப்பானைச் சேர்ந்த யோஹெய் சசாகாவா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தொழுநோய் ஒழிப்பில் இவரது பங்களிப்பிற்காகவும் உலக அமைதிக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய கவிதை மற்றும் புத்தகங்களின் மறுமலர்ச்சிக்காகத் தாகூர் விருதானது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றது.