பஞ்சாபின் ரோபார் நகரில் அமைந்துள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், சட்லஜ் ஆற்றில் தாந்தலம் என்ற அரிய உலோகம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
தாந்தலம் ஆனது மின்னணுவியல் மற்றும் குறைக்கடத்திகளில் பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது.
ஓர் அரிய உலோகமான தாந்தலம் என்பது மற்றும் சாம்பல் நிற, கனமான, மிகவும் கடினமான, மேலும் துரு எதிர்ப்புத் திறன் கொண்ட உலோகங்களில் ஒன்றாக அறியப் படுகிறது.
இதனை உடையாமல் நீட்டி, இழுத்து, மெல்லிய கம்பி அல்லது இழை போன்று மாற்றலாம்.
இது மிக அதிக உருகுநிலை கொண்டது.
தாந்தலம் ஆனது முதன்முதலில் ஆண்டர்ஸ் குஸ்டாஃப் எகன்பெர்க் என்ற சுவீடன் நாட்டு அறிவியலாளரால் 1802 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.