திரிபுராவின் முதல்வர் சமீபத்தில் திரிபுரா தேயிலைக்கான அதிகாரப்பூர்வ இலச்சினையை வெளியிட்டார்.
இந்த திரிபுரா தேயிலை இலச்சினையானது திரிபுராவின் அடையாளச் சின்னமான நீர்மஹாலைக் கொண்டுள்ளது.
நீர்மஹால் ஆனது திரிபுராவின் மன்னரான பிர் பிக்ரம் கிஷோர் தேப்பர்மான் மானிக்யவாவால் ருத்ரசாகர் ஏரியின் நடுவில் அவரின் கோடைக்கால வசிப்பிடமாகக் கட்டப்பட்டது.
இது இந்தியாவின் நீரின் நடுவில் அமைந்த மிகப்பெரிய அரண்மனை ஆகும். மேலும் இது இந்தியாவில் நீரின் நடுவில் அமைந்துள்ள 2 அரண்மனைகளில் ஒன்றாகும். மற்றொரு அரண்மனையானது ராஜஸ்தானில் அமைந்துள்ள ஜல் மஹால் ஆகும்.