இந்திய அரசு, திரிபுரா மாநில அரசு மற்றும் திரிபுராவில் தடை செய்யப்பட்ட கிளர்ச்சிக் குழுவான சமீர் குமார் தேவ் வர்மா தலைமையிலான திவிப்ரா தேசிய விடுதலை முன்னணி (National Liberation Front of Twipra - NLFT-SD) ஆகியவற்றிற்கிடையே அமைதி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி NLFT-SD ஆனது வன்முறையைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது.
NLFT ஆனது 1997 ஆம் ஆண்டு முதல் சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வடகிழக்கில் சரணடைந்த “கிளர்ச்சியாளர்களுக்கான மறுவாழ்வுத் திட்டம், 2018”ன் படி சரணடைந்த கிளர்ச்சியாளர்களுக்கு சரணடைந்ததற்கான பயன்கள் வழங்கப் படவிருக்கின்றன.