தீக்சா ஷிண்டே என்பவர் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் சிறுபான்மை சேவை நிறுவனத்தின் காணொலி வாயிலான தோழமைக் குழுவின் ஒரு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் அவுரங்காபாத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஆவார்.
இவர் கருந்துளை குறித்த கோட்பாடு ஒன்றை எழுதினார்.
‘We live in Black Hole?’ என்ற இவரது ஆராய்ச்சிக் கட்டுரையானது 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி இதழினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.