தீவிரப்படுத்தப்பட்ட இந்திரதனுஷ் (IMI) 5.0 திட்டத்தின் இரண்டாம் கட்டமானது சமீபத்தில் நிறைவடைந்தது.
இது பகுதியளவு தடுப்பூசி போடப்பட்ட மற்றும் தடுப்பூசி போடப்படாத ஐந்து வயது வரையிலான குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை இலக்காகக் கொண்ட நோய்த் தடுப்பு மருந்து வழங்கீட்டுப் பிரச்சாரமாகும்.
பொது நோய்த் தடுப்பு மருந்து வழங்கீட்டுத் திட்டத்தின் (UIP) கீழ் அனைத்துத் தடுப்பு மருந்துகளும் வழங்கப்பட்டன.
இத்திட்டமானது நாடு முழுவதும் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது.
மூன்றாவது கட்டம் ஆனது வரும் அக்டோபர் மாதத்தில் மேற்கொள்ளப்படும்.