சிக்கிமில் உள்ள டீஸ்டா-3 நீர்மின் நிலையத்தினை புனரமைப்பதற்காக சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
முதலில் அமைக்கப்பட்ட 1,200 மெகாவாட் திறன் கொண்ட தீஸ்தா-III சுங்தாங் நீர்மின் உற்பத்தி அணை ஆனது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 03 மற்றும் 04 ஆம் தேதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அழிக்கப்பட்டது.
தெற்கு லோனாக் ஏரியிலிருந்து உருவாகிய பனிப்பாறை ஏரி உடைப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் (GLOF) தூண்டப்பட்ட வெள்ளம் ஆனது, கற்காரைகளால் ஆன 60 மீட்டர் உயர அணையை அடித்துச் சென்றது.
புதிய கட்டமைப்பானது 118.64 மீட்டர் உயர கற்காரைகளால் ஆன ஈர்ப்பு விசை சார்ந்த அணையாக புனரமைக்கப்படும்.