துணைக் கடற்படைத் தலைவராக தற்பொழுது பணியாற்றும் கரம்பீர் சிங் இந்திய கடற்படையின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கார்வாரில் புதிதாக ஒரு கடற்படைத் தளத்தைக் கட்டமைக்கும் “ஸீபேர்டு” (Seabird) என்ற திட்டத்திற்கு தலைமை வகிப்பதற்காக இவர் வெகுவாக அறியப்படுகிறார்.
கிழக்கு கடற்படைத் தளபதியாக இவரது முந்தைய நியமனத்தின் போது இந்தியக் கடற்படையின் இரட்டை அணு ஆயுதங்களைச் செயல்படுத்தும் அதிகாரியாக இவர் இருந்தார்.