TNPSC Thervupettagam

துப்பாக்கித் தொழிற்சாலை தினம்

March 19 , 2019 2020 days 489 0
  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 18 அன்று துப்பாக்கித் தொழிற்சாலை தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • துப்பாக்கித் தொழிற்சாலை வாரியம் (Ordnance Factory Board) என்பது இந்திய அரசின் கீழ் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கீழ் இயங்கும் ஒரு தொழிற்துறை அமைப்பாகும்.
  • இது வான், நிலம் மற்றும் நீர் அமைப்புப் பகுதிகளில் விரிவான தயாரிப்பு வரம்பின் ஆராய்ச்சி, வளர்ச்சி, உற்பத்தி, பரிசோதனை, சந்தைப்படுத்தல் மற்றும் தளவாடங்கள் ஆகியவற்றில் ஈடுபடுகிறது.
  • OFB என்பது இந்திய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் உலகின் மிகப்பெரிய ஒரு உற்பத்தி அமைப்பாகும். மேலும் இது இந்திய அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் ஒரு பழமையான அமைப்பாகும்.
  • இது இந்தியாவின் “பாதுகாப்புத் துறையின் நான்காவது தூண்” என்றும் “ஆயுதப் படைகளுக்குப் பின்னால் இருக்கும் படை” என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்தியாவின் பழமையான துப்பாக்கித் தொழிற்சாலையின் உற்பத்தி 1802 ஆம் ஆண்டு மார்ச் 18 அன்று கொல்கத்தாவின் கோசிப்பூரில் தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்