TNPSC Thervupettagam

தென்னாப்பிரிக்காவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சிவிங்கிப் புலிகள் இடமாற்றம்

February 1 , 2023 536 days 281 0
  • அடுத்த 10 ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவிலிருந்து 100 சிவிங்கிப் புலிகளை இடம் மாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
  • இது தென்னாப்பிரிக்க நாடு வெளியிட்ட ஒரு அரசுச் செய்திக்குறிப்பு மூலம் உறுதி செய்யப் பட்டுள்ளது.
  • தற்போதைய நிலவரப்படி, மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவிற்கு 12 சிவிங்கிப் புலிகளை இடமாற்றம் செய்வதற்கான ஒரு ஒப்பந்தம் ஆனது தென் ஆப்பிரிக்காவுடன் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • வரும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் ஏழு ஆண் மற்றும் ஐந்து பெண் சிவிங்கிப் புலிகள் குனோ தேசியப் பூங்காவினை வந்தடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • அதிகளவிலான வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு காரணமாக இந்தியாவில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட்ட ஒரே பெரிய மாமிச உண்ணி சிவிங்கிப் புலிகள் மட்டுமேயாகும்.
  • இந்தியாவில் இருந்த கடைசிச் சிறுத்தையானது, 1947 ஆம் ஆண்டில் இன்றைய சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்தில் உயிரிழந்ததோடு, 1952 ஆம் ஆண்டில் இந்த இனம் அழிந்து விட்டதாக அறிவிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்