இந்தியாவின் ஐஎன்எஸ் சுனய்னா என்ற கப்பலானது ஒரு வருடாந்திரப் பயிற்சி நடவடிக்கையான ஒருங்கிணைந்தக் கடல்சார் படைகளின் தென்பகுதி தயார்நிலை என்ற நடவடிக்கையில் பங்கேற்க உள்ளது.
ஒருங்கிணைந்தக் கடல்சார் படைகள் என்பது பன்னாட்டுக் கடற்படைக் கூட்டாண்மை ஆகும்.
இந்திய நாடானது ஒருங்கிணைந்தக் கடற்படைகளின் உறுப்பினர் நாடு அல்ல.
இந்தப் பயிற்சிகளில் இந்தியா ஒரு துணைப் பங்குதாரர் நாடாக பங்கேற்க உள்ளது.
இது ஒருங்கிணைந்தக் கடல்சார் படைகளால் (CMF) நடத்தப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியாகும்.
இந்தப் பயிற்சி நடவடிக்கையில் அமெரிக்கா, இத்தாலி, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும், இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் கப்பல்களும் பங்கேற்கின்றன.