சமீபத்தில் அவர் தனது புரட்சிகர மரபினைப் புவியிலேயே விட்டு விட்டு மறைந்தார்.
இவர் 1980 ஆம் ஆண்டுகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) அல்லது CPI-ML (மக்கள் போராட்டக் குழு – PWG) கட்சி உறுப்பினரானார்.
2004 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் மாநில அரசுக்கும் PWG குழுவிற்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கத்தார், புரட்சிகர எழுத்தாளர்கள் வரவர ராவ் மற்றும் கல்யாண் ராவ் ஆகியோருடன் இணைந்து நக்சலைட்டுகளின் தூதுவர்களாகச் செயல்பட்டனர்.
இருப்பினும், 2017 ஆம் ஆண்டில், கத்தார் மாவோயிஸ்டுகளுடனான தனது அனைத்து உறவுகளையும் முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டு தன்னை ஒரு ‘அம்பேத்கரைட்’ என்று அறிவித்தார்.
மேலும் 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், அவர் தனது வாழ்நாளில் முதல் முறையாக வாக்களித்தார்.
கதர், தனது ஆரம்பக் கட்ட வாழ்நாளின் போது தெலுங்கானா போராட்டத்தினை ஆதரித்தார்.