தெலுங்கானாவின் வனத் துறையானது தனது காடு வளர்ப்புத் திட்டத்தை மேம்படுத்துவதற்கும் நகர்ப்புற காடுகளை வளர்ப்பதற்கும், புகழ்பெற்ற ஜப்பானிய “மியாவாகி” காடு வளர்ப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மியாவாகி முறையானது சிறிய அளவிலான நகர்ப்புறக் காடுகளைக் குறைந்த இடங்களில் ஒப்பீட்டளவில் குறைந்த காலத்தில் வளர்ப்பதற்கு நன்கு அறியப்பட்டதாகும்.
இம்முறையானது ஜப்பானின் தாவரவியலாளரான அகிரா மியாவாகியால் உருவாக்கப்பட்டது.