தெலுங்கானா மாநிலத்தின் நல்லமலா வனப்பகுதியில் அமைந்துள்ள அமராபாத் புலிகள் காப்பகத்தில் முன்மொழியப்பட்ட யுரேனியச் சுரங்கத்திற்கு எதிராக மாநில சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
இந்தச் சுரங்கத் திட்டம் காரணமாக காற்று மற்றும் நீர் மாசுபாடு குறித்த பொது மக்களின் அச்சங்கள் தவிர, நல்லமலா மற்றும் அதனைச் சுற்றியுள்ள வாழ்விடங்களுக்கும் பல்லுயிர் பெருக்கத்திற்கும் இது அச்சுறுத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
மேலும் இது பூர்வீக செஞ்சுப் பழங்குடியினரையும் இடம்பெயரச் செய்யும்.