மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் ஹர்சிம்ரத் பாதல் தெலுங்கானாவின் நிசாமாபாத் மாவட்டத்தில் உள்ள லக்கம்பள்ளியில் அம்மாநிலத்தின் முதலாவது மிகப் பெரிய உணவுப் பூங்காவைத் திறந்து வைத்தார்.
குறிப்பாக அழுகிப் போகும் பொருள்களின் மீது கவனம் செலுத்துவதுடன் விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு நிலையிலும் மதிப்பு கூட்டப்படுதல் மற்றும் உணவு வீணாகுதலைக் குறைத்தல் ஆகியவற்றின் மூலம் உணவுப் பதப்படுத்துதல் துறைக்கு ஊக்கமளிப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது போன்ற மிகப்பெரிய உணவுப் பூங்காக்கள் நவீன உணவுப் பதப்படுத்துதல் அலகுகளை விவசாய / தோட்டக் கலை மண்டலத்துடன் இணைக்கின்றன.