தெளிவற்ற நுண்ணலை கவசத்தினை உருவாக்கும் வகையிலான நுண் உலோக இழைகளைக் கொண்ட ஏவுகணை
July 10 , 2024 8 days 66 0
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது நடுத்தர வீச்சு வரம்புடைய தெளிவற்ற நுண்ணலை கவசத்தினை உருவாக்கும் வகையிலான நுண் உலோக இழைகளைக் கொண்ட ஏவுகணையினை (MR-MOCR) இந்தியக் கடற்படையிடம் ஒப்படைத்துள்ளது.
இது ரேடார் சமிஞ்சைகளை மறைத்து, இயங்குதளங்கள் மற்றும் அமைப்புகளைச் சுற்றி ஒரு நுண்ணலை கவசத்தினை உருவாக்கி, ரேடார் மூலம் கண்டறியப்படும் வாய்ப்பினைக் குறைக்கிறது.
இந்த ஏவுகணையானது, ஏவப்படும் போது, போதிய நிலைப்பு நேரத்துடன், போதுமான பரப்பளவில் பரவி விண்வெளியில் நுண்ணலைகளால் ஆன தெளிவற்ற கவசத்தினை உருவாக்குகிறது.
இது ரேடியோ அலைவரிசை ரீதியிலான ஈர்ப்புக் கருவிகளைக் கொண்ட எதிரி நாட்டு அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒரு பயனுள்ள கவசத்தை உருவாக்குகிறது.