ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ பசுமை வரவினைப் பெற்று அதை ஒரு பிரத்தியேகப் பரிமாற்றத் தளத்தில் வர்த்தகம் செய்யக்கூடிய ஒரு சிறப்புத் திட்டத்தை அரசானது அறிமுகப்படுத்தியுள்ளது.
இது சுற்றுச்சூழலின் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டிற்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையினைக் குறிக்கிறது.
இந்த திட்டம் ஆனது 8 வகையான செயல்பாடுகளை உள்ளடக்கும்.
இந்த முன்னெடுப்பானது தொழில்துறைகள், நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களை அவற்றின் தற்போதைய அல்லது பிற உறுதிப்பாடுகளை நிறைவேற்ற ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டம் ஆனது 2023 ஆம் ஆண்டு கார்பன் வரவு வர்த்தகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கார்பன் வரவிலிருந்து தனிப்பட்டது.
இது 2001 ஆம் ஆண்டு எரிசக்தி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.