தேசியப் பழங்குடியின நடனத் திருவிழாவின் 2019 ஆம் ஆண்டுப் பதிப்பானது சத்தீஸ்கரின் தலைநகரான ராய்ப்பூரில் நடைபெற்றது.
தேசியப் பழங்குடியின நடனத் திருவிழா சத்தீஸ்கரில் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்தப் பழங்குடியின நடனத் திருவிழாவானது ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் நடைபெறுகின்றது. இது மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
இந்தத் திருவிழாவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைத்தார்.