- இந்தியாவில், இந்தியப் பாதுகாப்புப் படைகளைக் கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 04 ஆம் தேதியானது தேசியப் பாதுகாப்பு தினமாக (ராஷ்டிரிய சுரக்சா திவாஸ்) அனுசரிக்கப்படுகின்றது.
- இந்தத் தினமானது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர், துணை இராணுவப் படையினர், கமாண்டோக்கள், பாதுகாப்பு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் இதர நபர்கள் உள்ளிட்ட அனைத்து பாதுகாப்புப் படைகளுக்கும் மரியாதை செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மார்ச் 04 என்ற தினமானது 1966 ஆம் ஆண்டில் இந்தியாவில் தேசியப் பாதுகாப்பு ஆணையம் (NSC - National Security Council) ஏற்படுத்தப்பட்ட தினத்தைக் குறிக்கின்றது.
- முதலாவது தேசியப் பாதுகாப்பு தினமானது 1972 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
தேசியப் பாதுகாப்பு ஆணையம்
- தேசியப் பாதுகாப்பு ஆணையமானது இந்தியாவின் பொருளாதார, அறிவியல், மற்றும் உத்திசார் விவகாரங்களைக் கண்காணிக்கின்றது.
- இது 1998 ஆம் ஆண்டில் இந்தியாவில் அப்போதைய பிரதமரான அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது.
- NSC ஆனது இந்திய அரசின் கீழ் உள்ள மத்தியத் தொழிலாளர் துறை அமைச்சகத்தினால் அமைக்கப்பட்டுள்ளது.