பிரதமர் மோடி ஜனவரி 16 ஆம் தேதியை ‘தேசியப் புத்தாக்க நிறுவன தினமாக’ அறிவித்தார்.
இந்தியாவில் இத்தினம் கொண்டாடப் படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்திய நாடானது, 2022 ஆம் ஆண்டு ஜனவரி 10 முதல் ஜனவரி 16 வரையில் தொடங்கி ஸ்டார்ட்-அப் இந்தியா புத்தாக்க வாரத்தைக் கொண்டாடுகிறது.
தொழில் மற்றும் தொழில்துறை வர்த்தக ஊக்குவிப்புத் துறையால், இந்த வார அளவிலான கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டில், தேசியப் புத்தாக்க நிறுவன தினமானது ஆறு கருத்துருக்களில் கொண்டாடப் படுகிறது.
அவை நிலையான வளர்ச்சி, எதிர்காலத்தின் தொழில்நுட்பம், உள்ளூர் முதல் உலகளவு வரை, உற்பத்தியில் ஜாம்பவான்களை உருவாக்குதல், டிஎன்ஏவைத் தூண்டச் செய்தல் மற்றும் கடைமட்டப் பகுதியில் இருந்து உருவாதல் ஆகியவை ஆகும்.