இந்தியாவில் புவி அறிவியல், சுரங்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் சிறப்பாகப் பங்காற்றியதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 22 விஞ்ஞானிகளுக்கு 2018 ஆம் ஆண்டின் தேசியப் புவி அறிவியல் விருதுகள் வழங்கப்பட்டன.
நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி புது தில்லியில் இந்த விருதுகளை அவர்களுக்கு வழங்கினார்.
இந்த விருதுகள் 10 பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டன.
முக்கியமான 2 விருதுகள்
நீர்வாழ் உயிர் புவி வேதியியல் ஆராய்ச்சித் துறையில் தனது குறிப்பிடத்தக்க உலகளாவியப் பங்களிப்புகளுக்காக பேராசிரியர் சையத் வாஜி அஹ்மண்ட் நக்வி என்பவருக்கு 2018 ஆம் ஆண்டின் தேசியப் புவி அறிவியல் விருது வழங்கப் பட்டுள்ளது.
எரிமலை, புவி வேதியியல் மற்றும் பாறையியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்கப் பணிகளை ஆற்றியதற்காக கோவா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் சோஹினி கங்குலிக்கு 2018 ஆம் ஆண்டின் இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ளது.