ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசமானது தேசியப் பொது ஆவணப் பதிவு அமைப்பை (NGDRS - National Generic Document Registration System) தொடங்கியுள்ளது.
NGDRS-ன் ஒரு பகுதியாக விளங்கும் மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களிடையே 10வது பகுதியாக ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசம் விளங்குகின்றது.
NGDRS ஆனது நிலத்தை வாங்குதல் மற்றும் விற்றல் போன்ற பரிமாற்றங்களின் போது நடைபெறும் அனைத்துப் பரிமாற்றங்களும் தற்போதுள்ள நேரடியான பதிவு அமைப்பிலிருந்து ஆன்லைன் பதிவு அமைப்பிற்கு மாறுவதைக் குறிக்கின்றது.
அஞ்சல் தாள்கள் மின்னணு-அஞ்சல் தாள்களால் மாற்றப்படுகின்றது.
இது இந்தியப் பங்குதாரர் கழகத்தின் ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
NGDRS-ன் தொடக்கமானது தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் “ஒரே தேசம் ஒரே மென்பொருள்” ஆகியவற்றை நோக்கிய ஒரு மிகப்பெரிய முயற்சியாகும்.