மத்திய அரசானது, அதிநவீன தேசிய அளவிடல் வலையமைப்பினை அறிமுகப் படுத்தி உள்ளது.
தேசிய அளவிலான "தொடர் இயக்க குறிப்புத் தரவு நிலைய" (CORS) வலையமைப்பு என்பது இந்தியக் அளவிடல் அமைப்பினால் இயக்கப்படும்.
இந்தியா தற்போது சென்டிமீட்டர் அளவிலான இடமறிதல் சேவைகளை நிகழ்நேரத்தில் வழங்கும் திறன் கொண்ட உலகத் தரம் வாய்ந்த துல்லியமான இடம் சார்ந்த சேவை வழங்கீட்டு அமைப்பினைக் கொண்டுள்ளது.
இது (ஏறத்தாழ) + / - 3 சென்டி மீட்டர் அளவிலான துல்லியத் தன்மையுடன் நிகழ் நேர இடம் சார்ந்த வரைபடமிடல் சேவைகளை வழங்கும் திறன் கொண்டது.
இந்தியக் அளவிடல் அமைப்பு ஆனது இந்தியா முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட தொடர் இயக்க குறிப்புத் தரவு நிலையங்களை அமைத்துள்ளது.