TNPSC Thervupettagam

தேசிய இயற்கை மருத்துவ தினம் – நவம்பர் 18

November 22 , 2020 1378 days 450 0
  • இந்தத் தினமானது 2018 ஆம் ஆண்டில் மத்திய ஆயுஷ் துறை (ஆயுர்வேதம், யோகா & இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) அமைச்சகத்தினால் அறிவிக்கப் பட்டது.
  • 1945 ஆம் ஆண்டில் இதே தினத்தன்று மகாத்மா காந்தி அகில இந்திய இயற்கை நலக் கூட்டமைப்பு அறக்கட்டளையின் வாழ்நாள் தலைவராக உருவெடுத்தார்.
  • புனேவில் உள்ள தேசிய இயற்கை மருத்துவ நிறுவனமானது இத்தினத்தன்றுகாந்தி -  ஒரு  நோய் குணப்படுத்துபவர்என்ற புத்தகத்தை வெளியிட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “இயற்கை மருத்துவத்தின் மூலம் உயிர்ச் சக்தியை வலுப்படுத்துதல்என்பதாகும்.
  • இந்த நடைமுறையைத் தானே முன்மொழிந்ததில் மகாத்மா காந்தியும் ஒருவராவார்.
  • இவர் இயற்கை நலம் என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.
  • இவர் புனேவிற்கு அருகில் உருளிக்கஞ்சன் என்ற இடத்தில் ஓர் இயற்கை மருத்துவ மையமான நிசர்கோபாச்சார் ஆசிரமம் அமைக்க உதவி புரிந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்