TNPSC Thervupettagam

தேசிய இளைஞர்கள் தினம் – ஜனவரி 12

January 12 , 2018 2451 days 1247 0
  • பெரும் சமூக சீர்திருத்தவாதியும், தத்துவவாதியும், சிந்தனையாளரும், மற்றும் இந்திய இளைஞர்களுக்கான துடிப்புச் சின்னமாகவும் விளங்கும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ஆம் தேதி ஆண்டுதோறும் நாடு முழுவதும் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
  • சுவாமி விவேகானந்தரின் 155-வது பிறந்த நாள் நினைவு ஆண்டு இவ்வருடம் கொண்டாடப்படுகின்றது.
  • போதிப்பதையே தம் வாழ்வாகவும், அவற்றையே தம் பணியாகவும், கொண்டு செயல்பட்ட விவேகானந்தரின் தத்துவங்களையும் கொள்கைகளையும், போதனைகளையும் உலகம் முழுவதும் பரப்புவதற்காக தேசிய இளையோர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது.
  • 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி நரேந்திரநாத் தத்தா எனும் இயற்பெயருடன் பிறந்த சுவாமி விவேகானந்தர் 19ஆம் நூற்றாண்டின் முக்கியத் துறவியான ராமகிருஷ்ண பரமஹம்சரின் தலைமைச் சீடராவார். இவர் 1902 ஆண்டு ஜீலை 4 அன்று மண்ணுலகை விட்டுப் பிரிந்தார்.
  • தன்னுடைய சிகாகோ மாநாட்டின் பேச்சால் புகழ்பெற்ற விவேகானந்தர், வேதாந்தம் மற்றும் யோகா போன்றவற்றிலுள்ள இந்தியத் தத்துவங்களை மேற்கத்திய உலகில் அறிமுகப்படுத்திய இந்திய வாழ்வியல் ஆளுமைகளில் முக்கிய நபருமாவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்