மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிசாதி பாரத் என்பவரை தேசிய இளையோர் விருதிற்கு தேர்வு செய்துள்ளது.
இந்த விருதானது இளையோர் மேம்பாட்டுத் துறையில் பணியாற்றும் தனிநபர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
ஜனவரி 12 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும் 27வது தேசிய இளையோர் தினத்தின் போது இந்த விருது வழங்கப்பட உள்ளது.