அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையானது சமீபத்தில் தேசிய காலநிலைப் பாதிப்பு அறிக்கையினை வெளியிட்டது.
இந்த அறிக்கை தற்போதைய காலநிலை அபாயங்கள் மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் முக்கியக் காரணிகள் ஆகியவற்றைப் பொறுத்து இந்தியாவில் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை அடையாளம் காணுகிறது.
இந்த அறிக்கையின் படி, நாட்டின் எட்டு கிழக்கு மாநிலங்கள் காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடும்.
அவை மிசோரம், பீகார், மேற்கு வங்காளம், அருணாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் அசாம் ஆகியனவாகும்.
அசாம், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகியவை 60%க் என்ற அளவிற்கும் மேலான “அதிகம் பாதிப்புக்குள்ளாகும் மாவட்டங்கள்” எனும் பிரிவினைச் சேர்ந்த மாவட்டங்களைக் கொண்டு உள்ளன.
ஜார்க்கண்ட் 0.67 எனும் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் குறியீட்டினைப் பெற்றுள்ளது.
ஜார்க்கண்ட்டை அடுத்து மிசோரம், ஒடிசா, சத்தீஸ்கர், அசாம், பீகார் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகியவை இக்குறியீட்டில் இறங்குவரிசையில் உள்ளன.
இவை “ஒப்பீட்டளவில் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்கள்” என பெயரிடப் பட்டு உள்ளன.
மகாராஷ்டிரா 0.42 என்ற மிகக்குறைவான பாதிப்புக்குள்ளாகும் குறியீட்டு அளவினைப் பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவைத் தவிர கோவா, கேரளா, தமிழ்நாடு ஹரியானா ஆகிய மாநிலங்கள் மிகவும் குறைவான பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்களாக உள்ளன.
இவை “மிகவும் குறைவான பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்கள்” எனப் பெயரிடப் பட்டு உள்ளன.