TNPSC Thervupettagam

தேசிய கைத்தறி தினம் - ஆகஸ்டு 07

August 6 , 2018 2244 days 1072 0
  • தேசிய கைத்தறி தினம் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு 7ம் தேதியன்று நாடு முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்களை போற்றும் வண்ணம் அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த வருடம் தேசிய கைத்தறி தினத்தின் மூன்றாவது பதிப்பாகும்.

பின்னணி

  • 2015ம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு ஆகஸ்டு 7ம் தேதியை தேசிய கைத்தறி தினமாக அறிவித்தது.
  • பிரிட்டிஷ் அரசால் ஏற்படுத்தப்பட்ட வங்கப் பிரிவினைக்கு எதிராக போராடுவதற்காக இதே தினம் 1905ஆம் ஆண்டில் கல்கத்தாவின் டவுன் ஹாலில் ஆரம்பிக்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவு கூர்வதற்காக ஆகஸ்டு 7ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • 2015ம் ஆண்டு ஆகஸ்டு 7ம் தேதியன்று, தமிழ்நாட்டில் சென்னையில் பிரதமர் நரேந்திர மோடியால் முதல் தேசிய கைத்தறி தினம் அனுசரிக்க ஆரம்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்