ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் ஜம்மு-காஷ்மீர் தேசிய சட்ட பல்கலைக் கழக மசோதா 2019 க்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த மசோதாவானது ஜம்மு-காஷ்மீரில் ஒரு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது சட்டம் மற்றும் சட்ட செயல்முறைகள் பற்றிய அறிவைப் பரப்புவதற்கும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நீதியை அடைய சட்ட விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும் உதவும்.