மத்திய அரசானது, 2025 ஆம் ஆண்டு தேசிய நீர்வழிகள் (படகுத் துறைகள் / படகு முனையங்களின் கட்டுமானம்) விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் தேசிய நீர்வழி வலையமைப்பில் உள்ள படகுத்துறைகள் மற்றும் படகு முனையங்களின் கட்டுமானம் மற்றும் செயல்பாட்டில் தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான ஒரு கட்டமைப்பை இது வகுக்கிறது.
தேசிய நீர்வழிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்கு இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தினால் (IWAI) உருவாக்கப்பட்ட ஒரு பிரத்தியேக எண்ணிமத் தளத்தினையும் இது அறிமுகப்படுத்தியுள்ளது.