2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்காக முறையே இராணுவ செவிலியர் பணியில் பணியாற்றிய மேஜர் ஜெனரல் ஸ்மிதா தேவ்ராணி மற்றும் பிரிகேடியர் அமிதா தேவ் ராணி ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் அவர்கள் தேசிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதினை வழங்கினார்.
இந்த விருதானது 1973 ஆம் ஆண்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தினால் நிறுவப்பட்டது.
செவிலியர்கள் மற்றும் செவிலிய வல்லுநர்கள் சமுதாயத்திற்கு வழங்கும் சிறப்பானச் சேவைகளை அங்கீகரிப்பதற்காக இது வழங்கப் படுகிறது.