மத்திய மின்சார ஆணையம் (CEA) 2022-32 ஆம் ஆண்டிற்கு என்று ஒரு தேசிய மின்சாரத் திட்டத்தை அறிவித்துள்ளது.
இதில் கடந்த ஐந்தாண்டுகள் (2017-22), அடுத்த ஐந்தாண்டுகளுக்கான விரிவான திட்டம் (2022-27) மற்றும் அதற்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கான (2027-32) தொலை நோக்குத் திட்டம் ஆகியவை அடங்கும்.
2026-27 ஆம் ஆண்டு இறுதிக்குள் புதை படிவம் சாராத மின்சாரத்தின் பங்கு 57.4% ஆக அதிகரிக்கும்.
இது 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி 42.5% சதவிகிதத்தில் இருந்து 2031-32 ஆம் ஆண்டின் இறுதியில் 68.4% ஆக அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப் படுகிறது.