மணிப்பூரின் சுதந்திரத்தைக் காப்பதற்காக தங்களது உயிர்களைத் தியாகம் செய்த வீரர்களின் நினைவாக ஆகஸ்ட் 13 ஆம் தேதியானது மணிப்பூரில் தேசபக்தர்கள் தினமாக அனுசரிக்கப் பட்டது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த திகேந்திரஜித் மற்றும் தங்கல் ஆகியோர் 1891 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 அன்று வெளியே கொண்டு வரப்பட்டு போலோ மைதானத்தின் அருகே உள்ள ஓர் இடத்தில் பொது மக்கள் மத்தியில் தூக்கிலிடப்பட்டனர்.
மணிப்பூர் மாநிலமானது இவர்கள் தூக்கிலிடப்பட்ட தினத்தினை தேசபக்தர்கள் தினமாக அனுசரிக்கின்றது.