எய்ம்ஸ் மருத்துவமனையானது நாட்டில் முதன்முறையாக உள்நாட்டின் சுற்றுப்புறங்களில் உள்ள ஓபியோய்டுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நடமாடும் மெத்தடோன் வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
எய்ம்ஸ்-ன் தேசிய போதைக்கு அடிமையானோர் சிகிச்சை மையம் கிழக்கு டெல்லியில் ஒரு புதிய சேவையை சோதனைத் திட்டமாகத் தொடங்கியுள்ளது.
தற்போது உலகின் சில தேர்ந்தெடுக்கப்பட்ட வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, போர்ச்சுக்கல், ஸ்பெயின், கனடா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் மட்டுமே இது போன்ற நடமாடும் வாகனங்கள் சேவையில் உள்ளன.
இந்தச் சேவையை தெற்காசியப் பிராந்தியத்தில் தொடங்கிய முதல் நாடு இந்தியா ஆகும்.