தமிழ் திரைப்பட நடிகர் விவேக் அவர்கள் சமீபத்தில் தனது 59 வயதில் காலமானார்.
2009 ஆம் ஆண்டில், இந்திய அரசானது அவரின் கலைக்கான பங்களிப்புக்காக பத்மஸ்ரீ விருதை வழங்கியது.
என்.எஸ். கிருஷ்ணனின் (கலைவாணர்) வழி வந்த இவர் சின்னக் கலைவாணர் என்று அழைக்கப் பட்டார்.
இந்திய முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2010 ஆம் ஆண்டில் விவேக் அவர்கள் பசுமை கலாம் என்ற திட்டத்தைத் தொடங்கினார்.
நெகிழி மாசுபாடு இல்லாத தமிழகத்திற்கான பிரச்சாரம் என்பதற்கான ஒரு தூதராக அவர் நியமிக்கப் பட்டார்.