TNPSC Thervupettagam

நதிவாழ் ஓங்கில்களுக்கான உலகப் பிரகடனம்

November 3 , 2023 260 days 312 0
  • 11 ஆசிய மற்றும் தென் அமெரிக்க நாடுகள், "நதிவாழ் ஓங்கில்களுக்கான (டால்பின்) உலகப் பிரகடனம்" என்ற உலகளாவியப் பிரகடனத்தில் சமீபத்தில் கையெழுத்திட்டன.
  • இது உலகில் எஞ்சியிருக்கும் ஆறு ஓங்கில் இனங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது.
  • பொறுப்புமிக்க நன்னீர்வாழ் ஓங்கில் வளங்காப்பினை மையமாகக் கொண்டு, நதி வாழ் ஓங்கில்கள் காணப்படும் 14 நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்தப் பிரகடனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது அனைத்து நதி ஓங்கில் இனங்களின் எண்ணிக்கை குறைவினை நிறுத்தச் செய்வதையும், மிகவும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள இந்த இனங்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சீன நதிவாழ் ஓங்கில் அல்லது பைஜி எனப்படும் ஏழாவது நதிவாழ் ஓங்கில் இனமானது, 2007 ஆம் ஆண்டில் அழிந்து விட்டதாக அறிவிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்