நாகாலாந்தின் பூர்வகுடி மக்களின் பதிவேட்டை (Register of Indigenous Inhabitants of Nagaland - RIIN) உருவாக்குவதற்கான முறைகளை வடிவமைப்பதற்கு ஒரு ஆணையத்தை நாகாலாந்து அரசு அமைத்துள்ளது.
இக்குழுவானது ஓய்வுபெற்ற தலைமைச் செயலாளரான பானோவ் ஜெ ஜமீர் என்பவரின் தலைமையில் செயல்படவிருக்கின்றது.
இது தகுதி நிலை, அடையாளச் சான்றிதழ்களாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஆவணங்கள் மற்றும் RIINஐ செயல்படுத்துதல் தொடர்பான பிற பிரச்சனைகள் ஆகியவை குறித்துப் பரிந்துரைக்கும்.
இதுபற்றி
RIIN என்பது நாகாலாந்து மாநிலத்தில் உள்ள அனைத்துப் பூர்வகுடி மக்களின் பதிவேடாகும். இது தகுதியற்ற நபர்களை நீக்குகின்றது.
நாகாலாந்து ஒரு முழு மாநிலமாக உருவாகிய தினமான 1963 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதிக்கு முன்னர் நாகாலாந்தில் குடியேறிய மக்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப் படவிருக்கின்றனர்.