TNPSC Thervupettagam

நாகாலாந்து - கலகம் நிறைந்த பகுதி

January 1 , 2022 934 days 626 0
  • மத்திய அரசானது ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் என்ற சட்டத்தின் கீழ், முழு நாகாலாந்து மாநிலத்தினையும் மேலும் 6 மாதங்களுக்கு கலகம் நிறைந்த பகுதியாக அறிவித்தது.
  • இந்த அறிவிப்பானது 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 30 முதல் நடைமுறைக்கு வரும்.
  • மேலும் அந்த மாநிலத்தின் நிலைமையினைக் கலகம் நிறைந்த மற்றும் ஆபத்தான பகுதி எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.
  • நாகாலாந்திலிருந்து, சர்ச்சை மிக்க ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தினை திரும்பப் பெறுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்காக என்று நிறுவப் பட்ட ஒரு உயர்மட்டக் குழுவினை மத்திய அரசு நிறுவியதையடுத்த ஒரு சில நாட்களில் இந்த முடிவானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்