சத்தீஸ்கரின் சிறப்பு நறுமண மிகு நாக்ரி துப்ராஜ் அரிசிக்குப் புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
இது இந்த அரிசிக்குத் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஒரு புதிய அடையாளத்தை வழங்கும்.
சத்தீஸ்கரின் பாஸ்மதி என்று பிரபலமாக அறியப்படும் நாக்ரி துப்ராஜ் அரிசி, அந்த மாநிலத்தின் பாரம்பரியமான, நறுமணம் கொண்ட அரிசி வகையாகும்.
2019 ஆம் ஆண்டில் சுர்குஜா மாவட்டத்தின் “ஜிராபூல்” அரிசிக்குப் புவிசார் குறியீடு வழங்கப் பட்டதற்குப் பிறகு, தற்போது நாக்ரி துப்ராஜ் அரிசிக்குப் புவிசார் குறியீடு வழங்கப் பட்டுள்ளது.
நாக்ரி துப்ராஜ் அரிசிக்குப் புவிசார் குறியீடானது, பெண்கள் சுய உதவிக் குழுவான 'மா துர்கா ஸ்வயம் சஹாயதா’ என்ற குழுவிடம் வழங்கப்பட்டது.